தொட்டினிலே எனை
போட்ட நாள்முதலாய்
தோளினிலே எனை
சுமந்து வளர்ப்பார் அப்பா..
எனக்காக உடல்
வருத்தித் தேயும் அப்பா
எம் மழலை மொழி
கேட்டு மகிழும் அப்பா..
கல்வியிலே நாம்
உயரச் செய்யும் அப்பா
கடமையிலே கண்ணாக
வளர்ப்பார் அப்பா..
உன் மூச்சில் எமை
கலந்து வாழும் அப்பா
உழைப்பாயே எமக்காக
ஓடாய்த் தேய்ந்து..
ஒரு போதும் உன்னை
நான் மறக்க மாட்டேன்
உன் காலில் செருப்பாகி
நானும் தேய்வேன்..
உன் பெருமை எழுதிட
தான் முடிந்திடுமா
உலகத்தின் வடிவமே
நீ தான் அப்பா..